என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க தேசிய அளவில் குழு- உச்ச நீதிமன்றம் கருத்து
Byமாலை மலர்16 Dec 2020 8:54 AM GMT (Updated: 16 Dec 2020 12:51 PM GMT)
விவசாயிகள் பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், பிரச்சனையை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த பிரச்சினை விரைவில் தேசிய பிரச்சினையாக மாறும் என்பதால், விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க, தேசிய அளவில் குழு அமைக்கலாம் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள், அரசு மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகளும் குழுவில் இடம்பெறவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்தக் கோரும் மனுக்கள் மீது நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய அரசு மற்றும் டெல்லி, அரியானா மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
விவசாய அமைப்புகளை இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள நீதிபதிகள் அனுமதி அளித்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X