என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
12 மாநிலங்களில் இணையதளம் பயன்படுத்தாத 60 சதவீத பெண்கள்
Byமாலை மலர்15 Dec 2020 11:55 PM GMT (Updated: 15 Dec 2020 11:55 PM GMT)
12 மாநிலங்களில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் இதுவரை இணையதளமே பயன்படுத்தியது இல்லை என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:
22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வகம் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது. 6 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மராட்டியம், மேகாலயா, தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நகர் ஹவேலி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் இதுவரை இணையதளமே பயன்படுத்தியது இல்லை என்று தெரிய வந்தது.
அவர்களுடன் ஒப்பிடுகையில், அதிகமான ஆண்கள் இணையதளம் பயன்படுத்தி உள்ளனர். 7 மாநிலங்களில் சுமார் 50 சதவீத ஆண்கள் இணையதளம் பயன்படுத்தி இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆந்திரா, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே எழுத்தறிவு சதவீதம் குறைவாக உள்ளது. கேரளா, லட்சத்தீவு, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே எழுத்தறிவு சதவீதம் அதிகமாக உள்ளது.
22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய குடும்ப சுகாதார ஆய்வகம் என்ற அமைப்பு ஒரு ஆய்வு நடத்தியது. 6 லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், ஆந்திரா, அசாம், பீகார், குஜராத், கர்நாடகா, மராட்டியம், மேகாலயா, தெலுங்கானா, திரிபுரா, மேற்கு வங்காளம், யூனியன் பிரதேசங்களான தாத்ரா நகர் ஹவேலி, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவற்றில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட பெண்கள் இதுவரை இணையதளமே பயன்படுத்தியது இல்லை என்று தெரிய வந்தது.
அவர்களுடன் ஒப்பிடுகையில், அதிகமான ஆண்கள் இணையதளம் பயன்படுத்தி உள்ளனர். 7 மாநிலங்களில் சுமார் 50 சதவீத ஆண்கள் இணையதளம் பயன்படுத்தி இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ஆந்திரா, பீகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே எழுத்தறிவு சதவீதம் குறைவாக உள்ளது. கேரளா, லட்சத்தீவு, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பெண்களிடையே எழுத்தறிவு சதவீதம் அதிகமாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X