search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க் ஜூக்கர்பர்க்-முகேஷ் அம்பானி
    X
    மார்க் ஜூக்கர்பர்க்-முகேஷ் அம்பானி

    அடுத்த 20 ஆண்டில் உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் - முகேஷ் அம்பானி

    அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்ம்ஸ்-இல் 9.99 சதவீத பங்குகளை வாங்க ரூ. 43,574 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது. 

    இந்நிலையில், பேஸ்புக் பியூவல் பார் இந்தியா 2020 நிகழ்வில் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் பேசியதாவது:

    ஜியோ பிளாட்பார்ம்ஸ் உடனான கூட்டணி மூலம் இந்தியாவில் இயங்கி வரும் பல லட்சம் சிறு வியாபாரங்களுக்கு உதவியாக இருக்க முடியும்.

    பெருந்தொற்று பாதிப்புக்கு பின் சிறு தொழில் முனைவோர்களுக்கு டிஜிட்டல் தளங்கள் அவசியமானது. சிறு வியாபாரங்களுக்கு உதவி செய்வதே பேஸ்புக்கில் எங்களின் நோக்கம். இதற்கு இந்தியாவை தவிர சிறந்த இடம் இருக்க முடியாது என குறிப்பிட்டார்.

    அவரை தொடர்ந்து பேசிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:

    வாட்ஸ் அப்பில் இந்தியாவில் பல மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். ஜியோ நிறுவனமும் பல மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

    ஜியோ மற்றும் பேஸ்புக் கூட்டணி பொதுமுடக்கத்தின்போது எவ்வாறு செயல்பட்டன என்பதற்கு எங்களுடைய சொந்த உதாரணம் உள்ளது. பேஸ்புக்கின் முதலீடுதான் இந்த இயக்கத்துக்கு காரணமாக அமைந்தது.

    ஜியோவுக்கு மட்டுமல்ல, இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அந்நிய நேரடி முதலீட்டிற்கும். ஜியோ மற்றும் பேஸ்புக் இடையேயான எங்கள் கூட்டு முக்கியமானது. இது இந்தியா, இந்தியர்கள் மற்றும் சிறு இந்திய வணிகங்களுக்கு சிறந்தது என்பதை நிரூபிக்கும்.

    எங்கள் நிறுவனத்தைக் கட்டியெழுப்பியதில் நான் கற்றவற்றை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு மீண்டும் சொல்கிறேன். மூன்று அடிப்படை கொள்கைகள் முக்கியமானவை.

    தொழில்முனைவோருக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் இருப்பது முக்கியம். எது செய்தாலும் அடுத்தவரின் உணர்வறிதல் மற்றும் படைப்பாற்றல் முக்கியம். உறவு, நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் முக்கியத்துவம். 

    பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவில் இல்லாதபோது கொரோனா போன்ற தொற்று ஏற்பட்டு இருந்தால் நாடு பெரும் பின்னடைவை சந்தித்து இருக்கும்.

    அடுத்த 20 ஆண்டுகளில் உலகின் 3 முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என தெரிவித்தார்.
    Next Story
    ×