search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    ஜொலிக்கும் அறிவிப்பாகிவிட்ட ரூ.20 லட்சம் கோடி சலுகை - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை சமாளிக்க கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டமும் ஜொலிக்கும் அறிவிப்பாகிவிட்டதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பத்திரிகை செய்தியை இணைத்திருந்தார். அதில், கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளை சமாளிக்க கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி சலுகையில் இதுவரை 10 சதவீதம் மட்டுமே விடுவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தெரிய வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    அதை சுட்டிக்காட்டி, ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-

    தேர்தலுக்கு முன்பு, ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக ஜொலிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது, ரூ.20 லட்சம் கோடி சலுகை திட்டமும் ஜொலிக்கும் அறிவிப்பாகி விட்டது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×