என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எந்த சூழலையும் எதிர்கொள்ள முப்படைகள் தயார் நிலையில் உள்ளன - பிபின் ராவத்
Byமாலை மலர்14 Dec 2020 7:59 PM GMT (Updated: 14 Dec 2020 8:07 PM GMT)
எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார் நிலையில் உள்ளது என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடர்ந்து தயாராகி வரும் நிலையில் நாம் எதிர்கொள்ளக் கூடிய எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
லடாக் எல்லையில் இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் எல்லைகளை காக்க முழு உரிமை உள்ளது. முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்றார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார். வடக்கு எல்லையில் எந்த சவாலையும் ராணுவம் எதிர் கொள்ளும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X