search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    டெல்லி போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா

    விவசாயிகளுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த டெல்லி போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போதும் கொரோனா கணிசமாக அதிகரித்து வரும் மாநிலங்களில் டெல்லியும் ஒன்று. இந்த சூழலில் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் கொரோனா பரவலுக்கு மேலும் வாய்ப்பாகி விடுமோ? என்ற அச்சம் நாடு முழுவதும் நிலவி வந்தது. இந்த பீதியை அதிகரிக்கும் வகையில், அங்குள்ள சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்துக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீஸ் அதிகாரிகளுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.

    இந்த விவகாரம் விவசாயிகள் போராட்டக்களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த போலீசாருடன் தொடர்பில் இருந்தவர்கள் மூலம் விவசாயிகளுக்கும் கொரோனா பரவக்கூடுமோ? என்ற அச்சம் தற்போது போராட்டக்களத்தில் ஏற்பட்டு உள்ளது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பலரும் முககவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்பதால் இந்த அச்சம் அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×