என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜகவினர் மீது தாக்குதல்- மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் சம்மன்
Byமாலை மலர்11 Dec 2020 8:16 AM GMT (Updated: 11 Dec 2020 8:16 AM GMT)
மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமைச் செயலருக்கு உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்றபோது, அவருடன் சென்ற கார்கள் மீது ஒரு கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. கற்களை வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்தன. பாஜக முக்கிய தலைவர்களான முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் சிலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாகவும் எச்சரித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கொல்லப்பட்டதாக பாஜக மேலிட தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய அரசுக்கு மேற்கு வங்க ஆளுநர் அறிக்கை அனுப்பியிருந்தார். அதில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மாநில தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X