என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ தலைமை தளபதி நரவனே ஐக்கிய அரபு அமீரகம் பயணம்
Byமாலை மலர்8 Dec 2020 6:56 PM GMT (Updated: 8 Dec 2020 6:56 PM GMT)
இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
புதுடெல்லி:
இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவர் இன்றும், நாளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நரவனே, மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து, இந்தியா- அமீரகம் இடையிலான பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிப்பார்.
பின்னர் நரவனே தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக வருகிற 13-ந் தேதி சவுதி அரேபியா செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கும் அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்துகிறார். அவற்றில், இந்தியா- சவுதி இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறார். பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களையும் பரிமாறிக்கொள்கிறார்.
சவுதி அரேபியாவில் அந்நாட்டு ராணுவ தலைமையகம், மன்னர் அப்துலஜீஸ் ராணுவ அகாடமி ஆகியவற்றுக்கு நரவனே செல்வார். தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் அவர், அங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு உரையாற்றுகிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்லும் முதல் இந்திய ராணுவ தலைமை தளபதி என்ற முறையில் நரவனேயின் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவர் இன்றும், நாளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் மேற்கொள்கிறார். அங்கு நரவனே, மூத்த ராணுவ அதிகாரிகளை சந்தித்து, இந்தியா- அமீரகம் இடையிலான பாதுகாப்பு உறவை மேம்படுத்தும் வழிகள் குறித்து விவாதிப்பார்.
பின்னர் நரவனே தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக வருகிற 13-ந் தேதி சவுதி அரேபியா செல்கிறார். அங்கு 2 நாட்கள் தங்கும் அவர், ராணுவ உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்துகிறார். அவற்றில், இந்தியா- சவுதி இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கிறார். பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களையும் பரிமாறிக்கொள்கிறார்.
சவுதி அரேபியாவில் அந்நாட்டு ராணுவ தலைமையகம், மன்னர் அப்துலஜீஸ் ராணுவ அகாடமி ஆகியவற்றுக்கு நரவனே செல்வார். தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் அவர், அங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு உரையாற்றுகிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்லும் முதல் இந்திய ராணுவ தலைமை தளபதி என்ற முறையில் நரவனேயின் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X