என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவில் கவரிங் நகைகளை அடகு வைத்து அரசு வங்கியில் ரூ.1.69 கோடி மோசடி செய்த பெண் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அரசு வங்கியில் தணிக்கை துறை அதிகாரிகள் ஆண்டு தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வயநாடு பகுதியை சேர்ந்த பிந்து(வயது43) என்ற பெண் 44 முறை நகைக்கடன் வாங்கி உள்ளதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அந்த பெண்ணின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அவர் 9 வங்கி கணக்குகளை பயன்படுத்தி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து 44 முறை நகைகளை அடகு வைத்து ரூ. 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 385 வரை பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பிந்து வங்கியில் அடகு வைத்த நகைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் அடகு வைத்த 5.5 கிலோ நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. அவர் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ. 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 385 பணத்தை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கோழிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஜார்ஜ் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து பிந்துவை போலீசார் கைது செய்தனர்.
அவர் 44 முறை கவரிங் நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்திருப்பதால், வங்கி ஊழியர்களுக்கும் மோசடியில் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் உள்பட 9 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்