search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரடி தாக்குதல்
    X
    கரடி தாக்குதல்

    சத்தீஷ்காரில் கரடி தாக்கி 4 பேர் பலி

    சத்தீஷ்கார் மாநிலம் தேவ்கார் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்
    ராய்ப்பூர்:

    சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.

    இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன் எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×