என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் வணிக வளாகம் அருகே தீ விபத்து
Byமாலை மலர்5 Dec 2020 9:53 PM GMT (Updated: 5 Dec 2020 9:53 PM GMT)
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா நகரில் தோஸ்தி வணிக வளாகம் அமைந்துள்ளது. இதனருகே பல கடைகள் அமைந்துள்ளன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென இந்த கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவலறிந்து 2 தீயணைப்பு வாகனங்கள், 2 அதிவிரைவு பொறுப்பு வாகனங்கள் மற்றும் 2 தண்ணீர் டேங்கர்கள் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிரிழப்புகளும் இல்லை.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X