search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,175 பேருக்கு கொரோனா தொற்று

    மேற்கு வங்காளத்தில் இன்று புதிதாக 3,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
    இந்தியாவில் தொடக்க காலத்தில் மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. இதில் தமிழ்நாடு, மராட்டியம் மிகப்பெரிய அளவில் கொரோனா தொற்றை குறைத்துள்ளது.

    அதேவேளையில் கேரளா, டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லியில் 3-ம் கட்ட அலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மேற்கு வங்காளத்தில் புதிதாக 3,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4,99,697  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  8,677 பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா தொற்று காரணமாக தற்போது 23,964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து இன்று 3,207  பேர் குணமடைந்துள்ள நிலையில் 4,67,056 பேர் குணமடைந்துள்ளனர்
    Next Story
    ×