என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சை
Byமாலை மலர்5 Dec 2020 2:52 AM GMT (Updated: 5 Dec 2020 2:52 AM GMT)
சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திற்கு மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சையான ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டுள்ளது.
மும்பை :
சிவசேனாவின் கருத்துகளை அதிரடியாக கூறிவருபவர் அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி.. அந்த கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இதய அடைப்பு நீக்க (ஆஞ்சியோபிளாஸ்டி) சிகிச்சை செய்யப்பட்டது.
அவருக்கு நேற்று முன்தினம் மீண்டும் இதய அடைப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை வெளியிட்ட அவரது தம்பி சுனில் ராவத் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
அவருக்கு (சஞ்சய் ராவத்) இதய அடைப்பு நீக்க சிகிச்சையாக ஏற்கனவே 3 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் அவர் லீலாவதி தனியார் ஆஸ்பத்திரியில் மீ்ண்டும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராபி மேற்கொள்ளப்பட்டது. அப்போது இதய ரத்த குழாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டது தெரிவந்தது. இதனால் சீரான ரத்த ஓட்டத்திற்காக அவருக்கு மேலும் 2 ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவர் நலமாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X