என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி
Byமாலை மலர்4 Dec 2020 1:33 PM GMT (Updated: 4 Dec 2020 1:33 PM GMT)
ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்த மனைவி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.
மும்பை:
மராட்டிய மாநிலம் லாத்தூரை சேர்ந்தவர் அன்னாராவ். இவரது மனைவி ஜோதி. அன்னாராவ் கடந்த 2012-ம் ஆண்டு லாத்தூரில் உள்ள பாபால்காவ் பகுதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். இந்தநிலையில் அன்னாராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காப்பீடு நிறுவனம் சார்பில் போலீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே அன்னாராவின் தம்பி பகவத், இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது அண்ணன் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அண்ணன் மனைவி ஜோதி, காப்பீடு நிறுவன ஏஜெண்டு ரமேஷ், அவரது நண்பர் கோவிந்த் ஆகியோர் மீது கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஆவ்சா போலீசில் அவர் புகார் அளித்து இருந்தார். ஆனால் போலீஸ் அப்போது ஜோதி மீது கொலை வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிக்கில் பிங்லே உத்தரவின் பேரில் வழக்கு கடந்த 3 மாதங்களாக மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அன்னாராவ் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்ததாக அவரது மனைவி ஜோதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் லாத்தூரை சேர்ந்தவர் அன்னாராவ். இவரது மனைவி ஜோதி. அன்னாராவ் கடந்த 2012-ம் ஆண்டு லாத்தூரில் உள்ள பாபால்காவ் பகுதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். இந்தநிலையில் அன்னாராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காப்பீடு நிறுவனம் சார்பில் போலீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே அன்னாராவின் தம்பி பகவத், இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது அண்ணன் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். அண்ணன் மனைவி ஜோதி, காப்பீடு நிறுவன ஏஜெண்டு ரமேஷ், அவரது நண்பர் கோவிந்த் ஆகியோர் மீது கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஆவ்சா போலீசில் அவர் புகார் அளித்து இருந்தார். ஆனால் போலீஸ் அப்போது ஜோதி மீது கொலை வழக்குப்பதிவு செய்யவில்லை.
இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிக்கில் பிங்லே உத்தரவின் பேரில் வழக்கு கடந்த 3 மாதங்களாக மறுவிசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக அன்னாராவ் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
இந்தநிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை கொலை செய்ததாக அவரது மனைவி ஜோதியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X