என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் நினைவு தபால் தலை- துணை ஜனாதிபதி வெளியிட்டார்
Byமாலை மலர்4 Dec 2020 10:17 AM GMT (Updated: 4 Dec 2020 10:17 AM GMT)
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது குஜ்ராலும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு சிறையில் கஷ்டப்பட்டனர் என்பதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நினைவுகூர்ந்தார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். மேலும் அவரது நினைவை போற்றி அவரது பணிகளை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுள்ளது. தபால் தலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
அப்போது பேசிய துணை ஜனாதிபதி, ஐ.கே.குஜ்ராலின் சாதனைகளை கூறினார். மேலும், 1940களில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது குஜ்ராலும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டு கஷ்டப்பட்டனர் என்பதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நினைவுகூர்ந்தார்.
வரலாற்றில் மிக மோசமான சுகாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், அனைத்து நாடுகளும், குறிப்பாக தெற்காசிய நாடுகள், பொருளாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்பவும், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X