search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி - 20 மணி நேர போராட்டம் தோல்வியில் முடிந்தது

    உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் மெஹோபா மாவட்டத்தில் உள்ள புதோதரா கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் தனேந்திரா, அங்குள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் மதியம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 30 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவனை மீட்க 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது. மேலும் சிறுவன் சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஆனால் எதுவும் பயன் அளிக்கவில்லை.

    இதற்கிடையே மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று காலை 9 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டான். உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
    Next Story
    ×