search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் புதிதாக 3,734 பேருக்கு கொரோனா தொற்று

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு பற்றிய விவரம்:  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 834 பேர் குணம் அடைந்த நிலையில், 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

    டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 82 ஆயிரத்து 058 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 514 ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன்  29,120 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 424 ஆக உள்ளது
    Next Story
    ×