search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள்
    X
    பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள்

    மத்திய அரசு- விவசாயிகள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை

    வேளாண் சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்களுக்கும் இடையில் நடைபெற்ற 2-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ்பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 8-வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது.

    டெல்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர்.

    விவசாயிகளின் பேரணியால் டெல்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வாகன போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தரைவழியாக டெல்லிக்கு செல்லும் மக்கள் இதனால் அவதியடைந்து உள்ளனர்.

    இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் விவசாயிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் பல்வேறு மந்திரிகளும் பங்கேற்றனர். இதேபோன்று விவசாயிகள் சார்பில் 35-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    தொடர்ந்து விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், மத்திய வேளாண் மந்திரி என்.எஸ். தோமர் தலைமையில் இன்று விவசாய சங்க தலைவர்களை சந்திப்பதற்கு முடிவானது. அதன்படி விவசாய தலைவர்களுடனான பேச்சுவார்த்தை கூட்டம் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது.

    சுமார் 7 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2-வது நாளான இன்றைய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×