என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரடோனா கல்லறையில் அவர் அஞ்சலி செலுத்தியதாக வைரலாகும் புகைப்படம்
Byமாலை மலர்1 Dec 2020 5:09 AM GMT (Updated: 1 Dec 2020 5:09 AM GMT)
மறைந்த கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா கல்லறையில் அவர் அஞ்சலி செலுத்தியதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலக புகழ் பெற்றவர் டீகோ மரடோனா நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பின் நவம்பர் 26 ஆம் தேதி இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. எனினும், இறுதி சடங்குகளில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மரடோனா மறைவிற்கு கால்பந்து விளையாட்டு பிரபலங்கள், உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். மரடோனா ரசிகர்கள் அவரது மறைவை ஏற்க முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் மரடோனா அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அஞ்சலி செலுத்தியதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மரடோனாவுக்கு பீலே அஞ்சலி செலுத்துகிறார். இது மிகவும் வலிக்கிறது எனும் தலைப்பில் புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டது என கண்டறியப்பட்டு உள்ளது. உண்மையில் பீலே மரடோனா கல்லறையில் அஞ்சலி செலுத்தி இருப்பின், அது பல ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கும். எனினும், அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை.
அந்த வகையில் பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர் பீலே மறைந்த மரடோனாவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியாக வைரலாகும் புகைப்படம் விஷமிகளில் உருவாக்கப்பட்டது என உறுதியாகிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X