என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
32 விவசாய குழுக்களுக்கு மட்டுமே அழைப்பு - அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரித்த விவசாயிகள்
Byமாலை மலர்1 Dec 2020 5:07 AM GMT (Updated: 1 Dec 2020 5:07 AM GMT)
நாட்டில் மொத்தம் 500-க்கும் அதிகமான விவசாய குழுக்கள் உள்ளபோது மத்திய அரசு 32 விவசாய குழுக்களை மட்டுமே பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை போலீசார் களைக்க முற்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 6-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், டிசம்பர் 3-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அழைப்பை விவசாயிகள் ஏற்கமறுத்தையடுத்து இன்று பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அதில் பங்கேற்குமாறு விவசாய குழுக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசின் பேச்சுவார்த்தை அழைப்பை நிராகரிப்பதாக விவசாய குழுக்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியின் இணை செயலாளர் சுக்விந்தர் சபரான் கூறியதாவது:-
நாட்டில் மொத்தம் 500-க்கும் அதிகமான விவசாய குழுக்கள் உள்ளன. ஆனால், அரசு பேச்சுவார்த்தை நடத்த 32 விவசாய குழுக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளது.
எஞ்சிய விவசாய குழுக்களுக்கு மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து விவசாய குழுக்களையும் அழைக்கும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமாட்டோம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X