என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 8.47 லட்சம் பேர் குணமடைந்தனர்
Byமாலை மலர்30 Nov 2020 2:01 AM GMT (Updated: 30 Nov 2020 2:01 AM GMT)
கர்நாடகத்தில் இதுவரை 8.47 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். புதிதாக 1,291 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 82 ஆயிரத்து 608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,291 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 83 ஆயிரத்து 899 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 15 பேர் பலியாகியுள்ளனர். இதனால் வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாகல்கோட்டையில் 4 பேர், பல்லாரியில் 13 பேர், பெலகாவியில் 25 பேர், பெங்களூரு புறநகரில் 38 பேர், பெங்களூரு நகரில் 686 பேர், பீதரில் 8 பேர், சாம்ராஜ்நகரில் 5 பேர், சிக்பள்ளாப்பூரில் 22 பேர், சிக்கமகளூருவில் 25 பேர், சித்ரதுர்காவில் 23 பேர், தட்சிண கன்னடாவில் 48 பேர், தாவணகெரேயில் 15 பேர், தார்வாரில் 16 பேர், கதக்கில் 9 பேர், ஹாசனில் 41 பேர், ஹாவேரியில் 10 பேர், கலபுரகியில் 19 பேர், குடகில் 11 பேர், கோலாரில் 12 பேர், கொப்பலில் 3 பேர், மண்டியாவில் 48 பேர், மைசூருவில் 37 பேர், ராய்ச்சூரில் 18 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் 22 பேர், துமகூருவில் 39 பேர், உடுப்பியில் 38 பேர், உத்தரகன்னடாவில் 21 பேர், விஜயாப்புராவில் 25 பேர், யாதகிரியில் 9 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் 10 பேர், மைசூருவில் 2 பேர், தட்சிண கன்னடா, துமகூரு, உத்தரகன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 428 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,530 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 47 ஆயிரத்து 612 பேர் குணம் அடைந்துள்ளனர். 24 ஆயிரத்து 503 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் 374 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X