என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான கடற்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
Byமாலை மலர்29 Nov 2020 9:38 PM GMT (Updated: 29 Nov 2020 9:38 PM GMT)
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர், என்ஜின் பாகங்கள் உள்ளிட்ட சிதைந்த பொருட்களை கோவாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடற்படை மீட்டது.
மும்பை:
இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26-ந் தேதி புறப்பட்ட மிக்29 கே பயிற்சி விமானம், அன்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். நிஷாந்த் சிங் என்ற மற்றொரு விமானியை காணவில்லை.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர், என்ஜின் பாகங்கள் உள்ளிட்ட சிதைந்த பொருட்களை கோவாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடற்படை மீட்டது.
ஆனால் மாயமான விமானி நிஷாந்த் சிங் பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் கடற்படையின் அதிவேகப் படகு உள்ளிட்ட 9 போர்க்கப்பல்களும், 14 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலோர போலீசாரும் தேடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமானியை பற்றி தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி கோவா கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய கடற்படையின் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடந்த 26-ந் தேதி புறப்பட்ட மிக்29 கே பயிற்சி விமானம், அன்று மாலை 5 மணியளவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் சென்ற 2 விமானிகளில் ஒருவர் மீட்கப்பட்டார். நிஷாந்த் சிங் என்ற மற்றொரு விமானியை காணவில்லை.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் லேண்டிங் கியர், என்ஜின் பாகங்கள் உள்ளிட்ட சிதைந்த பொருட்களை கோவாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதியில் கடற்படை மீட்டது.
ஆனால் மாயமான விமானி நிஷாந்த் சிங் பற்றி இன்னும் தகவல் தெரியவில்லை. தொடர்ந்து அவரை தேடும் பணியில் கடற்படையின் அதிவேகப் படகு உள்ளிட்ட 9 போர்க்கப்பல்களும், 14 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலோர போலீசாரும் தேடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விமானியை பற்றி தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி கோவா கடலோர மீனவ கிராமங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X