search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக கொடி (கோப்பு படம்)
    X
    பாஜக கொடி (கோப்பு படம்)

    பாஜக ஒருவழி பாதை...பாஜகவை விட்டு வெளியேறியவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை - சுஷில் மோடி

    பாஜக ஒருவழி பாதை... நீங்கள் இங்கு வரலாம் ஆனால் இங்கிருந்து வெளியே போக முடியாது என பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர்களில் சுஷில் மோடியும் ஒருவர். இவர் கடந்த 2105-2020 ஆம் ஆண்டு நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் 2017-2020 ஆம் பீகார் மாநில முன்னாள் துணை முதல்மந்திரியாக செயல்பட்டுள்ளார்.

    தற்போது நடந்த முடிந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. ஆனால் இந்த முறை பாஜகவின் சுஷில் மோடிக்கு பதவி வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் பீகார் முன்னாள் துணை முதல்மந்திரியுமான சுஷில் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் கட்சி பாஜக ஒரு வழிப்பாதை போன்றது, நீங்கள் உள்ளே வரலாம் ஆனால் இங்கிருந்து வெளியே செல்லமுடியாது. பாஜகவை விட்டு வெளியேறியவர்கள் யாரும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை.

    தற்போதைய பீகார் அரசில் நான் அங்கம் வகிக்கவில்லை என்றாலும் என் ஆத்மா தற்போதைய அரசாங்கத்தின் உள்ளே தான் வாழ்கிறது. நமது கட்சி பலவீனமாக நாம் ஒருபோதும்  அனுமதிக்கக்கூடாது.

    என்றார்.
    Next Story
    ×