என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இன்னும் 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம்: எடியூரப்பா
Byமாலை மலர்28 Nov 2020 1:46 AM GMT (Updated: 28 Nov 2020 1:46 AM GMT)
மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் 2, 3 நாட்களில் நடைபெறும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :
கர்நாடக மந்திரிசபை இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று தகவல் வெளியானது. மந்திரி பதவிக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. மந்திரிசபையில் யார்-யாருக்கு இடம் வழங்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனை டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய மந்திரிகளின் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படாத காரணத்தால், மந்திரிசபை மேலும் தள்ளிப்போகிறது.
இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மந்திரிசபை விரிவாக்கம் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் இன்று (நேற்று) தொலைபேசியில் பேசினேன். மந்திரிசபை விரிவாக்கம் இன்னும் 2, 3 நாட்களில் நடைபெறும். மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் விரைவாக முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து டெல்லிக்கு சென்று பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து பேசிய எடியூரப்பா, மந்திரிசபை விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்குமாறு கேட்டார். 2, 3 நாட்களில் ஆலோசித்து முடிவு சொல்வதாக கூறி எடியூரப்பாவை ஜே.பி.நட்டா அனுப்பி வைத்தார்.
இந்த சந்திப்பு நடந்து 2 வாரங்கள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போய் வருவதால், அந்த பதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X