என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்
Byமாலை மலர்27 Nov 2020 11:18 PM GMT (Updated: 27 Nov 2020 11:18 PM GMT)
அனைத்து பிரச்சினை தொடர்பாகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்துக்காக குவிந்துள்ளனர். அவர்களை டெல்லியில் அனுமதிப்பது தொடர்பாக போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மிகப்பெரும் மோதலும் நடந்தது.
இந்நிலையில், விவசாயிகள் இந்தப் போராட்டத்தை விட்டுவிடுமாறு மத்திய அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இந்த சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு விவசாய சங்கத்தினருடன் அரசு ஏற்கனவே பேசி வருகிறது. வரும் 3-ம் தேதி இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறும் அழைப்பு விடுத்திருக்கிறோம்’ என்று கூறினார்.
எனவே, தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும். அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X