என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பேச்சுவார்த்தை
Byமாலை மலர்27 Nov 2020 4:23 PM GMT (Updated: 27 Nov 2020 4:23 PM GMT)
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு நாட்டு தலைவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வரிசையில் பிரதமர் மோடி இன்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறவு, கொரோனா வைரசை எதிர்கொள்வது, வர்த்தகம், பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்திய-இங்கிலாந்து உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக எனது நண்பர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் சிறப்பான பேச்சுவார்த்தை நடத்தினேன்.
கொரோனாவை எதிர்கொள்தல், பருவநிலை மாற்றம், பாதுகாப்புத்துறை, வர்த்தகம், முதலீடு உள்பட அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துளது.
என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X