என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரபிக் கடலில் விழுந்த கடற்படை பயிற்சி விமானம்- பைலட்டை தேடும் பணி தீவிரம்
Byமாலை மலர்27 Nov 2020 4:26 AM GMT (Updated: 27 Nov 2020 11:37 AM GMT)
இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
புதுடெல்லி:
இந்திய கடற்படையின் பயிற்சி விமானமான மிக்-29கே ரக விமானத்தில் நேற்று பைலட்டுகள் அரபிக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம் சிறிது நேரத்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
விமானத்தில் பயணித்த ஒரு பைலட் மீட்கப்பட்டதாகவும், மற்றொரு பைலட்டை தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கடற்படை கூறி உள்ளது.
இந்திய கடற்படையின் கோவா தளத்தில் 40 மிக்-29 கே ரக போர் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா விமானந்தாங்கி கப்பலிலிருந்து இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X