என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை
Byமாலை மலர்26 Nov 2020 10:03 PM GMT (Updated: 26 Nov 2020 10:03 PM GMT)
பொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல்முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14 மற்றும் 15-ம்ம் தேதிகளில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, தமிழர் பண்டிகையான பொங்கலுக்கும் சுப்ரீம் கோர்ட்டு இயங்கும்.
இந்நிலையில், வரலாற்றில் முதல்முறையாக, பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு வருடத்தில் 191 நாட்கள் மட்டுமே இயங்கும். 174 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நீதிமன்றம் மதியம் ஒரு மணிக்கே மூடப்படும். பக்ரீத், ரம்ஜான், ஈத் உல் ஃபிதர் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. எனவே தமிழர் திருநாளுக்கும் விடுமுறை விட வேண்டுமென பல நாட்களாகவே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கை வரும் 2021-ம் ஆண்டு தான் நடமுறைக்கு வர உள்ளது.
பொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை அளிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X