search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லியில் புதிதாக 5,475 பேருக்கு கொரோனா தொற்று

    டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு பற்றிய விவரம்:  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 937 பேர் குணம் அடைந்த நிலையில், 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

    டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 51 ஆயிரத்து 262 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தொட்டது.   தொற்று பாதிப்புடன்  38,734 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 811 ஆக உள்ளது
    Next Story
    ×