search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீரமரணம்

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தி விட்டு அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றனர்.

    பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஜேஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும், அவர்களில் 2 பேர் பாகிஸ்தானையை எஞ்சிய 1 பயங்கரவாதி உள்ளூர் பகுதியை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் காஷ்மீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×