என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்
Byமாலை மலர்25 Nov 2020 7:22 PM GMT (Updated: 25 Nov 2020 7:22 PM GMT)
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
புதுடெல்லி:
கரூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மாதத்திற்கு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என அறிவித்தது.
மேலும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளன. வங்கியின் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் 4 ஆயிரம் ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், லட்சுமி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கரூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் லட்சுமி விலாஸ் வங்கி கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மாதத்திற்கு ரூ.25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாது என அறிவித்தது.
மேலும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
இந்த நிலையில், நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு உள்ளன. வங்கியின் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் மற்றும் 4 ஆயிரம் ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், லட்சுமி விலாஸ் வங்கி நிதி நெருக்கடியில் சிக்கியதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X