என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதா அரசு கைது செய்தால் ‘சிறையில் இருந்தும் வெற்றி பெறுவேன்’ - மம்தா
Byமாலை மலர்25 Nov 2020 7:06 PM GMT (Updated: 25 Nov 2020 7:06 PM GMT)
பா.ஜனதா அரசு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தும் நான் எங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்வேன் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பாங்குரா:
294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பாங்குரா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசினார். கொரோனா தொற்று காலத்தில் தனது முதல் பொதுக்கூட்டமான இதில் மம்தா கூறியதாவது:-
“பா.ஜ.க., பொய்களின் குவியலே அன்றி, ஒரு அரசியல் கட்சியல்ல. தேர்தல் வரும்போதெல்லாம், நாரடா என்ற ரகசிய ஆய்வு நடவடிக்கை, சாரதா ஊழல் புகார் குறித்து கூறி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டுவது அவர்கள் வாடிக்கை. ஆனால் பா.ஜ.க., அதன் அதிகார அமைப்புகள் குறித்து எனக்கு அச்சமில்லை. அவர்களுக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தும் நான் எங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்வேன்.
பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் நடந்துமுடிந்த தேர்தலில் அவர் தனது கட்சியை குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வைத்தார். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வருகிற தேர்தலில் நாங்களே பெரிய வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
294 இடங்களை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் பாங்குரா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசினார். கொரோனா தொற்று காலத்தில் தனது முதல் பொதுக்கூட்டமான இதில் மம்தா கூறியதாவது:-
“பா.ஜ.க., பொய்களின் குவியலே அன்றி, ஒரு அரசியல் கட்சியல்ல. தேர்தல் வரும்போதெல்லாம், நாரடா என்ற ரகசிய ஆய்வு நடவடிக்கை, சாரதா ஊழல் புகார் குறித்து கூறி திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டுவது அவர்கள் வாடிக்கை. ஆனால் பா.ஜ.க., அதன் அதிகார அமைப்புகள் குறித்து எனக்கு அச்சமில்லை. அவர்களுக்கு தைரியமிருந்தால் என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும். சிறையில் இருந்தும் நான் எங்கள் கட்சியை வெற்றிபெறச் செய்வேன்.
பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும் நடந்துமுடிந்த தேர்தலில் அவர் தனது கட்சியை குறிப்பிடத்தக்க அளவு வெற்றி பெற வைத்தார். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. வருகிற தேர்தலில் நாங்களே பெரிய வெற்றியுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X