என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாபில் டிச.1-ல் இருந்து இரவு நேர ஊரடங்கு அமல்- முதல்வர் அறிவிப்பு
Byமாலை மலர்25 Nov 2020 10:02 AM GMT (Updated: 25 Nov 2020 10:02 AM GMT)
பஞ்சாபில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 1-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தாலும், தற்போது சில மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் டிசம்பர் 1-ந்தேதியில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து நகரங்கள் மற்றும் டவுன்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி ஊரடங்கு நேரம் என்றும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட், திருமண மண்டபங்கள் இரவு 9.30 மணிக்குள் மூடவும் உத்தரவிட்டுள்ளார். டிசம்பர் 15-ந்தேதிக்குப்பின் மறுஆய்வு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X