என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து - பினராயி விஜயன் நடவடிக்கை
Byமாலை மலர்23 Nov 2020 8:44 PM GMT (Updated: 23 Nov 2020 8:44 PM GMT)
கேரளாவில் போலீசாருக்கான கூடுதல் அதிகார உத்தரவு தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அம்மாவி முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்
திருவனந்தபுரம்:
கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இந்த சட்ட திருத்தத்துக்கு சொந்த கட்சியில் இருந்தும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
முதல்-மந்திரி பினராயி விஜயன், விரிவான விளக்கம் அளித்தும், அவருடைய கருத்தை மேலிட தலைவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அந்த சட்ட திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
“இந்த சட்டம் தொடர்பாக சட்டசபையில் விரிவாக கலந்துரையாடப்படும். இந்த சட்டம் தொடர்பாக அனைவரது கருத்தும் கேட்கப்படும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் “இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டதால் முதல்-அமைச்சரின் அறிவிப்பு இதை தடை செய்யாது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கேரளாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில், போலீசாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று இந்த சட்ட திருத்தத்துக்கு சொந்த கட்சியில் இருந்தும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
முதல்-மந்திரி பினராயி விஜயன், விரிவான விளக்கம் அளித்தும், அவருடைய கருத்தை மேலிட தலைவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து அந்த சட்ட திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று அறிவித்துள்ளார்.
“இந்த சட்டம் தொடர்பாக சட்டசபையில் விரிவாக கலந்துரையாடப்படும். இந்த சட்டம் தொடர்பாக அனைவரது கருத்தும் கேட்கப்படும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் “இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டதால் முதல்-அமைச்சரின் அறிவிப்பு இதை தடை செய்யாது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X