என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கங்கனா ரணாவத் அலுவலக இடிப்பு விவகாரம்: தீர்ப்பு தேதி அறிவிப்பு
Byமாலை மலர்23 Nov 2020 3:50 PM GMT (Updated: 23 Nov 2020 3:50 PM GMT)
கங்கனா ரணாவத்தின் அலுவலகம் மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது.
மும்பை:
மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உள்ளது என கூறி மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா அரசை நடிகை கங்கனா ரணாவத் விமர்சம் செய்தார்.
இதனால் ஆத்திடமடைந்த சிவசேனா அரசு மும்பையில் உள்ள கங்கானாவின் வீடு-அலுவலக கட்டுமானங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என கூறி அதனை மும்பை மாநகராட்சி இடித்தது.
இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தின் தலையீட்டால் கட்டிட இடிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கு விசாரணை நிறைவடைந்ததையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X