என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தா பானர்ஜி மீது கவர்னர் குற்றச்சாட்டு
Byமாலை மலர்21 Nov 2020 11:44 PM GMT (Updated: 21 Nov 2020 11:44 PM GMT)
மம்தா பானர்ஜி அரசை குற்றம்சாட்டும் கருத்துகளை கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று டுவிட்டரில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கருக்கும், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜி அரசை குற்றம்சாட்டும் கருத்துகளை கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று டுவிட்டரில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.
‘திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஜனநாயக மதிப்பீடுகளை அழிக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘அதிகார வர்க்கத்தினர் சிலரால் என்னை நோக்கி கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, நியாயப்படுத்த இயலாதவை. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான மீறல்கள், நடவடிக்கைக்கு உரியவை. மாநிலத்தில் அரசியல்சாசன தலைவரான என்னை குறிவைத்து குற்றச்சாட்டுகள் கூறப்படுவது, இங்கு அதிகார வர்க்கமே அரசியல் சிறைக்கு உட்பட்டிருப்பதை காட்டுகிறது.
மம்தா அரசின் கீழ் போலீஸ் துறையின் அரசியல் மயமாக்கம், கோழைத்தனம், சரணாகதி துரதிர்ஷ்டவசமானது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அரசியல் சாசனம், சட்டத்தின் மீதான இதுபோன்ற அத்துமீறல்களை மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் கவனிக்க வேண்டும். அவற்றை அலட்சியப்படுத்தவோ, மன்னிக்கவோ கூடாது’ என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி மம்தாவுக்கு தான் எழுதியுள்ள கடிதத்தின் புகைப்படங்களையும் கவர்னர் ஜெகதீப் தாங்கர் வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்காள கவர்னர் ஜெகதீப் தாங்கருக்கும், அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜி அரசை குற்றம்சாட்டும் கருத்துகளை கவர்னர் ஜெகதீப் தாங்கர் நேற்று டுவிட்டரில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.
‘திரிணாமுல் காங்கிரஸ் அரசு, ஜனநாயக மதிப்பீடுகளை அழிக்கிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘அதிகார வர்க்கத்தினர் சிலரால் என்னை நோக்கி கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, நியாயப்படுத்த இயலாதவை. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான மீறல்கள், நடவடிக்கைக்கு உரியவை. மாநிலத்தில் அரசியல்சாசன தலைவரான என்னை குறிவைத்து குற்றச்சாட்டுகள் கூறப்படுவது, இங்கு அதிகார வர்க்கமே அரசியல் சிறைக்கு உட்பட்டிருப்பதை காட்டுகிறது.
மம்தா அரசின் கீழ் போலீஸ் துறையின் அரசியல் மயமாக்கம், கோழைத்தனம், சரணாகதி துரதிர்ஷ்டவசமானது, ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அரசியல் சாசனம், சட்டத்தின் மீதான இதுபோன்ற அத்துமீறல்களை மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் கவனிக்க வேண்டும். அவற்றை அலட்சியப்படுத்தவோ, மன்னிக்கவோ கூடாது’ என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-மந்திரி மம்தாவுக்கு தான் எழுதியுள்ள கடிதத்தின் புகைப்படங்களையும் கவர்னர் ஜெகதீப் தாங்கர் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X