என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாளில் கால்நடை பண்ணையில் 78 பசுக்கள் பலி - ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்
Byமாலை மலர்21 Nov 2020 10:49 PM GMT (Updated: 21 Nov 2020 10:49 PM GMT)
ராஜஸ்தானில் கால்நடை பண்ணையில் ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்துக்கு உட்பட்ட சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில் அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று உள்ளது. தனியார் பராமரித்து வரும் இந்த பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன.
இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளன.
ஒரே நாளில் நிகழ்ந்த இந்த 78 பசுக்களின் மரணத்துக்கான காரணம் குறித்து மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்ட தீவனத்தின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அவை உண்ட உணவு விஷமாக மாறியதால் இந்த பரிதாபம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தானின் சுரு மாவட்டத்துக்கு உட்பட்ட சர்தார்ஷகார் அருகே உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில் அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று உள்ளது. தனியார் பராமரித்து வரும் இந்த பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன.
இங்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் சில பசுக்கள் நோய்வாய்ப்பட்டு உள்ளன.
ஒரே நாளில் நிகழ்ந்த இந்த 78 பசுக்களின் மரணத்துக்கான காரணம் குறித்து மாநில கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பசுக்களுக்கு வழங்கப்பட்ட தீவனத்தின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அவை உண்ட உணவு விஷமாக மாறியதால் இந்த பரிதாபம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே நாளில் 78 பசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X