search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்
    X
    பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த வீரர்

    எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு

    எல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகளையும், குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. 

    இந்நிலையில், இன்று காலை ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. ஆத்திரத்தை தூண்டும் வகையிலான இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இருதரப்பினரும் மாறி மாறி சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஹவில்தார் பட்டீல் சங்ரம் சிவாஜி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    பாகிஸ்தான் ராணுவம் ஒரு பக்கம் அத்துமீறலில் ஈடுபடுவதுடன், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர். ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா பகுதியில் ஊடுருவிய 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×