என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய வீரர் உயிரிழப்பு
Byமாலை மலர்21 Nov 2020 7:13 AM GMT (Updated: 21 Nov 2020 7:13 AM GMT)
எல்லையில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, காஷ்மீர் எல்லையில் உள்ள இந்திய நிலைகளையும், குடியிருப்பு பகுதிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இன்று காலை ரஜோரி மாவட்டம் நவ்ஷேரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டது. ஆத்திரத்தை தூண்டும் வகையிலான இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இருதரப்பினரும் மாறி மாறி சிறிய ரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஹவில்தார் பட்டீல் சங்ரம் சிவாஜி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ஒரு பக்கம் அத்துமீறலில் ஈடுபடுவதுடன், பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவுகின்றனர். ஜம்மு மாவட்டம் நக்ரோட்டா பகுதியில் ஊடுருவிய 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சமீபத்தில் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X