என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் தேர்தல் வாக்குப்பதிவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் வீடியோ
Byமாலை மலர்19 Nov 2020 5:13 AM GMT (Updated: 19 Nov 2020 5:13 AM GMT)
பீகார் தேர்தல் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்டதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாக்கு சாவடி ஒன்றில் வாக்காளர்களுக்கு ஒருவர் இடையூறு செய்வது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ சமீபத்திய பீகார் தேர்தலின் போது எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வீடியோவில் வாக்கு சாவடியில் உள்ள நபர் ஒருவர் வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்யும் போது இடையூறு ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படி தான் பாஜக பீகார் தேர்தலில் வெற்றி பெற்றது எனும் தலைப்பில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. இது ஹரியானா மாநிலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். வீடியோவில் உள்ள பூத் அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டார்.
உண்மையில் இந்த சம்பவம் 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது நடைபெற்றது ஆகும். அந்த வகையில் வைரல் வீடியோ பீகார் தேர்தலின் போது எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X