search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    புதிய பாதிப்புகள் நேற்றைவிட அதிகம்... 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 89.58 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 83.83 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. புதிய நோய்த்தொற்றுகளை விட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
     
    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 89.58 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 89,58,484 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 585 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக 40 ஆயிரத்திற்கும் கீழே இருந்த புதிய பாதிப்புகள், இன்று 45 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,83,603 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 48,493 பேர் குணமடைந்துள்ளனர். 

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,43,303 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.47 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 93.58 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×