என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகம்... மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு
Byமாலை மலர்18 Nov 2020 3:53 AM GMT (Updated: 18 Nov 2020 3:53 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தில் பசுக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்படும் தனி அமைச்சகத்தின் முதல் கூட்டம் 22ம் தேதி நடைபெற உள்ளது.
போபால்:
இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்கள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவதை தடுக்கவும் பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.
உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும், பசுக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது அரசின் கடமை என சாதுக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பசுக்களின் பாதுகாப்பிற்காக தனி அமைச்சகத்தை உருவாக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இந்த அமைச்சகத்தில், கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டு மற்றும் உழவர் நலத் துறைகள் ஒரு அங்கமாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோபாஷ்டமியான வரும் 22ம் தேதி, அகர் மால்வா மாவட்டம் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெறும் என்றும் சவுகான் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X