என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய பிரதமர் மோடி
Byமாலை மலர்17 Nov 2020 6:59 PM GMT (Updated: 18 Nov 2020 1:26 AM GMT)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடியும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது, இந்தோ-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மைக்கான எங்கள் உறுதியான உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்தினோம். முன்னுரிமை பிரச்சினைகள் மற்றும் கோவிட் -19 தொற்று நோய், காலநிலை மாற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு பற்றியும் நாங்கள் விவாதித்தோம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவரது வெற்றி துடிப்பான இந்திய-அமெரிக்க வம்சாவளி உறுப்பினர்களுக்கு மிகுந்த பெருமை மற்றும் உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X