என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கான்பூர் மருத்துவக் கல்லூரியில் விரைவில் ஸ்புட்னிக் தடுப்பூசி பரிசோதனை
Byமாலை மலர்16 Nov 2020 9:32 AM GMT (Updated: 16 Nov 2020 9:32 AM GMT)
ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷியா அறிவித்தது. இது விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில், ரஷியா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தடுப்பூசி மருந்துகள்அடுத்த வாரம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மனிதர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கொரோனாவை அழிக்கும் சோதனையில் 92 சதவீதம் வெற்றிகரமாக இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X