search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
    X
    ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

    கான்பூர் மருத்துவக் கல்லூரியில் விரைவில் ஸ்புட்னிக் தடுப்பூசி பரிசோதனை

    ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை கான்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷியா அறிவித்தது. இது விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரியில், ரஷியா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-வி  தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தடுப்பூசி மருந்துகள்அடுத்த வாரம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் மனிதர்களுக்கு தடுப்பூசியை செலுத்தி மேற்கொள்ளப்படும் சோதனை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

    ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி, கொரோனாவை அழிக்கும் சோதனையில் 92 சதவீதம் வெற்றிகரமாக இருந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×