search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய வாகனம்
    X
    விபத்தில் சிக்கிய வாகனம்

    பாலத்தை உடைத்துக்கொண்டு நீரோடையில் விழுந்த வாகனம்- 7 பேர் பலி

    இமாச்சல பிரதேசத்தில் பாறைகள் நிறைந்த நீரோடையில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
    மாண்டி:

    இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி மாவட்டம் புல்கிராட் அருகே சென்றுகொண்டிருந்த ஒரு வாகனம், திடீரென நிலை தடுமாறி பாலத்தை உடைத்துக்கொண்டு நீரோடையில் விழுந்தது. பாறைகள் நிறைந்திருந்த நீரோடையில்  வாகனம் விழுந்ததால் பலத்த சேதமடைந்தது. வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு பாறைகள் மீது விழுந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

    விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்ததால் பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
    Next Story
    ×