என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணியாவிட்டால் அபராதம் - நாகலாந்து மாநிலத்தில் அமல்
Byமாலை மலர்15 Nov 2020 7:17 PM GMT (Updated: 15 Nov 2020 7:17 PM GMT)
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில் முக கவசத்தை அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
கோஹிமா:
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில் முக கவசத்தை அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதையொட்டி மாநில அரசு தலைமைச் செயலாளர் ஜே.ஆலம் விடுத்துள்ள அறிக்கையில், “பொது இடங்களில் முக கவசங்களை அணிவது, நிறுவனங்கள் கை கழுவும் வசதியை வழங்குவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது சரியாக பின்பற்றப்படுவது இல்லை என்று நாகலாந்து பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதை செய்ய தவறியவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில் முக கவசத்தை அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதையொட்டி மாநில அரசு தலைமைச் செயலாளர் ஜே.ஆலம் விடுத்துள்ள அறிக்கையில், “பொது இடங்களில் முக கவசங்களை அணிவது, நிறுவனங்கள் கை கழுவும் வசதியை வழங்குவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது சரியாக பின்பற்றப்படுவது இல்லை என்று நாகலாந்து பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதை செய்ய தவறியவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றிலும் உள்ள மற்றவர்களுக்கும் கொரோனா பரவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X