என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏழை, ஆதரவற்றோருக்கு நம்பிக்கை விளக்காக மாற உறுதியேற்போம்- ஜனாதிபதி தீபாவளி வாழ்த்து
Byமாலை மலர்14 Nov 2020 3:55 AM GMT (Updated: 14 Nov 2020 3:55 AM GMT)
மாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து வருமாறு:-
தீபாவளி பண்டிகை கொண்டாடும் இந்த புனிதமான நாளில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சி மற்றும் ஒளியின் இந்த பண்டிகையானது, ஒவ்வொரு வீட்டிற்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.
மனிதநேய சேவைக்காக உழைப்பதற்கு பண்டிகை தூண்டுகிறது. இந்த நன்னாளில், ஒரு விளக்கு அதன் ஒளியைப் பகிர்வதன் மூலம் பல விளக்குகளை ஒளிரச் செய்வது போலவே, நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் ஏழை, ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கை மற்றும் செழிப்பின் விளக்காக மாற உறுதியேற்போம்.
தீபாவளி என்பது தூய்மையின் பண்டிகையும் ஆகும். எனவே மாசு இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தூய்மையான தீபாவளியைக் கொண்டாடுவதன் மூலம் இயற்கையை மதிப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X