என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசியான் அமைப்புடன் தொடர்பை அதிகரிக்க இந்தியா முன்னுரிமை - பிரதமர் மோடி பேச்சு
Byமாலை மலர்12 Nov 2020 7:49 PM GMT (Updated: 12 Nov 2020 7:49 PM GMT)
‘ஆசியான்’ அமைப்புடன் எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கமான ‘ஆசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
பல ‘ஆசியான்’ நாடுகளுக்கு தென்சீன கடல் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளது.
இந்தியா-ஆசியான் இடையிலான 17-வது உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமரும் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இணக்கமான, பரிவான ‘ஆசியான்’ அமைப்பு தேவை என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்தியாவுக்கும், ஆசியான் அமைப்புக்கும் இடையே எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.
பொருளாதாரம், சமூகம், மின்னணு, நிதி, கடல்சார் விவகாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தொடர்பை வலுப்படுத்த விரும்புகிறோம். கடந்த சில ஆண்டுகளில், இத்துறைகளில் நெருங்கி வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கமான ‘ஆசியான்’ அமைப்பில் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அதனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
பல ‘ஆசியான்’ நாடுகளுக்கு தென்சீன கடல் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்சினை உள்ளது.
இந்தியா-ஆசியான் இடையிலான 17-வது உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமரும் கூட்டாக தலைமை தாங்கினார்கள்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:-
தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இணக்கமான, பரிவான ‘ஆசியான்’ அமைப்பு தேவை என்று நாங்கள் கருதுகிறோம்.
இந்தியாவுக்கும், ஆசியான் அமைப்புக்கும் இடையே எல்லாவகையான தொடர்புகளையும் அதிகரிக்க இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.
பொருளாதாரம், சமூகம், மின்னணு, நிதி, கடல்சார் விவகாரம் உள்பட அனைத்து துறைகளிலும் தொடர்பை வலுப்படுத்த விரும்புகிறோம். கடந்த சில ஆண்டுகளில், இத்துறைகளில் நெருங்கி வந்து விட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X