search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    கொரோனோ தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

    கொரோனா தடுப்பூசி போடப்படும் விதம் பற்றி அரசு விளக்கவேண்டும் என காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    பைசர், பயோன்டெக் ஆகிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளன.

    அதுதொடர்பான ஊடக செய்தியை இணைத்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ‘ஒரு நம்பிக்கை அளிக்கும் தடுப்பூசியை பைசர் நிறுவனம் உருவாக்கியிருந்தாலும், அனைத்து இந்தியர்களுக்கும் அது போடப்படுவதற்கான திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும். எல்லோருக்கும் எப்படி கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று விளக்கம் வேண்டும். இந்த தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி வெப்பநிலையில் வைத்திருந்து வினியோகிக்க வேண்டும். அதற்கான திறன் கொண்ட வினியோக நிறுவனம் இந்தியாவில் இல்லை’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×