search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றியை கொண்டாடும் பாஜகவினர்
    X
    வெற்றியை கொண்டாடும் பாஜகவினர்

    பாட்னா கட்சி அலுவலகத்தில் ஆடிப்பாடி வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்

    பீகார் தேர்தலில் பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றதன்மூலம், கூட்டணியில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது.
    பாட்னா:

    பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக, ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. ஆனால் கருத்துக்கணிப்புகளை தகர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றது. 

    ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மெகா கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன. பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றதன்மூலம், கூட்டணியில் அதிக இடங்களை வென்ற கட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. 


    இந்த வெற்றியை பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் திரண்ட தொண்டர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதேபோல் அனைத்து கிளை அலுவலகங்களிலும் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடினர். 
    Next Story
    ×