என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டேங்கர் லாரி கவிழ்ந்தது- சாலையில் கொட்டிய சோப்பு பவுடரை அள்ளிச் சென்ற பொதுமக்கள்
Byமாலை மலர்11 Nov 2020 5:33 AM GMT (Updated: 11 Nov 2020 5:33 AM GMT)
மேற்கு வங்கத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், அதில் இருந்த சோப்பு மூலப்பொருட்கள் சாலையில் கொட்டின.
அசன்சால்:
மேற்கு வங்க மாநிலத்தில் சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை ஏற்றி வந்த டேங்கர் லாரி இன்று காலை திடீரென சாலையில் கவிழ்ந்தது. ஹால்டியா பகுதியில் இருந்து ராஜஸ்தான் நோக்கி சென்ற அந்த டேங்கர் லாரி, அசன்சால் பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
டேங்கர் கவிழ்ந்ததால் அதில் இருந்த சோப்பு மூலப்பொருட்கள் சாலையில் கொட்டின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலையில் கொட்டிய சோப்பு மூலப்பொருட்களை அகற்றினர். மேலும் சோப்பினால் வாகனங்கள் வழுக்கி விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக மணல் தூவப்பட்டது.
அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து சோப்பு மூலப்பொருளை பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X